என் தமிழே-2143 ஜெயா நடேசன்

அமுது என்பார் இனிமை என்பார்
ஆழ்கடல் அழகிய முத்து என்பார்
தேன் மொழி செம்மொழி என்பார்
தெவிட்டாத சுவை பெற்றது என்பார்
அன்னை சொல்லித் தந்த மொழி
ஆராரோ பாட்டில் கேட்ட மொழி
சங்கே முழங்கும் ஒலித்த மொழி
சங்கம் வளர்த்த இலக்கிய மொழி
அன்பை போதிக்கும் அருமை மொழி
இன்பம் தரும் ஆறுதல் மொழி
துன்பம் போக்கும் துடிப்பு மொழி
அழியா வரம் பெற்ற ஆயுள் மொழி
அதுதான் எங்களின் உயிர் மொழி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading