இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

எல்லாளன்

அந்த நாளில்
அதிக சனிகளில்
எங்கள் ஊரில் எத்தனை வேள்விகள்
ஆடு கோழிகள்
அவரவர் நேர்த்தி
பீடைகள் விலக
பெரு விஷ யந்து
வீடடையாமல் விலக
வேண்டி ,என்றெலாம்
நேர்த்தி
கருகம்பனை எம் அருகு ஊர் ஆலயம்
கெளணாவத்தை
வைரவர்
வேள்வி நினைவு
இன்றும் மனதில்
ஆயிரம் ஆயிரம்
ஆட்டுக் கடாக்கள்
மூவிரண்டாயிரம்
கோழி சேவல்கள்
எல்லாம் பலியாம்
இன்றும் தொடராய்
ஊரே திரளும்
உச்சாகமாக
கன்னர் கடாத்தான்
கண்ணை உறுத்தும்
பென்னம் பெரிய
மாட்டின் அளவு
என்னே அழகு
ஊர்வலமாக
வீட்டில் இருந்து
வீதி உலாவாய்
கூட்டி வருவர்
கோலாகலமாய்
உயிர் வதை என்பர்
ஒரு சில பேர்கள்
ஆயினும் ஊரில்
அதுவே தொடராய்…

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading