” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
288 ஆம் வாரம்
“பனிப் பூ”
பூமி மாதின்மேல் வானம்
பூக்களை தூதாய் வீசும்
தாவி தவழ்ந்து வீழும்
தண்ணிய வெண்பனி பூவும்.
*
பூக்கள் பொலிந்து பரவ
போர்த்து பூமியை தழுவ
நீர்த்து கிடக்கும் பூமி
நிறைமாத கர்பிணி போல

தன்னை மறைவுள் கிடத்தி
தகாத உறவில் வருத்தி
தன்ன வளில்உறைந்தாளை
தகர்க்க கதிர் எறிவானே

ஆதவன் கனல் கதிர் பாய
ஆகாய பூ நீரார் மாற
மேலே ஆவியாய் உறிஞ்சி
விடுவானே மழையாய் பரிதி

பஞ்ச பூதத்தின் பலத்தில்
பந்தென பூமியாள் சுழற்சி
வஞ்ச மனிதனால் சூழல்
மாசானால் ஏது மகிழ்ச்சி?
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan