” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எல்லாளன்

இயந்திரத்தில் மின்வலுவால் ஆக்கம்
ரம்மியமாய் வீறுகொண்ட மாற்றம்
மந்திரத்தால் சிலைக்கு உரு ஏற்றும்
மத நெறியும் காணவில்லை மாற்றம்
அந்தரத்தில் சாகசங்கள் செய்ததும்
அணு திறனால் ஏவுகணை பெய்தும்
தன் திறத்தை காட்டும் எந்த நாடும்
சார்ந்துளதே மனித சக்தி ஊடும,

இறை பகவான் எங்கனுமே உருவாய்
இருக்கின்றான் தொளிலாளி வடிவாய்
நிறைவான உழைப்பாலே வீறாய்
நிகரில்லா வல்லரசு பேரால்
குறைவான ஊதியத்தில் கொணர்ந்து
குடியேற்றி அவர் உழைப்பில் நிமிர்ந்து
நிறவேறு பாட்டுக்குக்குள் ஒடுங்கி
நிற்கின்றான் தொளிலாளி அடங்கி.

பாதாள ரயில் சேவை பயணம்
பாதை எல்லாம் நெடுஞ்சாலை வதனம்
கீழ் ஓடும் சாக்கடை நீர் ஓட்ட
கிண்டி குழாய் நிலத்தோடு நாட்ட
வாழ்வெல்லாம் தன் உடலை வருத்தி
வைத்தவனை போற்றுவம் மே தினத்தில்
ஊழ்வினையே என்ற சொல்லை நிறுத்தி
உழைப்பவனை வாழ வைப்போம்
உயர்த்தி
உழைப்பாளி

Nada Mohan
Author: Nada Mohan