ஒளவை

நிலா
———-
வலமாய் வந்து
….. வளர்ந்து தேய்ந்து
பலநாள்த் தாகம்
….. பௌர்ணமி நிலவில்
உலவும் மேகம்
….. உன்னை மறைக்க
கலங்கி நின்ற
….. காலம் நினைவில்

முற்றம் நிறைந்த
….. மணலில் இருந்து
கற்றோம் நூறு
…. கதைகள் நிலவில்
சுற்றம் சூழ்ந்து
…. சோகம் மறந்து
பற்றாய் இருந்தோம்
…. பலநாள் நிலவில்

தனிமை எண்ணம்
….. தூரம் விலக்கி
இனிமை பொங்கும்
….. இன்பம் நிலவில்
கனிவாய் மனதைக்
….. கொள்ளும் அழகில்
பனியாய் விலகும்
….. பகையும் நிலவில்

காதல் நெஞ்சம்
….. கலந்து மகிழ்ந்து
மோதல் நிலையை
….. மறக்கும் நிலவில்
வாதம் வேண்டாம்
….. வரமாய்க் கண்டோம்
பாதம் பணிந்து
….. பகர்வோம் நன்றி.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading