” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒளவை

நிலா
———-
வலமாய் வந்து
….. வளர்ந்து தேய்ந்து
பலநாள்த் தாகம்
….. பௌர்ணமி நிலவில்
உலவும் மேகம்
….. உன்னை மறைக்க
கலங்கி நின்ற
….. காலம் நினைவில்

முற்றம் நிறைந்த
….. மணலில் இருந்து
கற்றோம் நூறு
…. கதைகள் நிலவில்
சுற்றம் சூழ்ந்து
…. சோகம் மறந்து
பற்றாய் இருந்தோம்
…. பலநாள் நிலவில்

தனிமை எண்ணம்
….. தூரம் விலக்கி
இனிமை பொங்கும்
….. இன்பம் நிலவில்
கனிவாய் மனதைக்
….. கொள்ளும் அழகில்
பனியாய் விலகும்
….. பகையும் நிலவில்

காதல் நெஞ்சம்
….. கலந்து மகிழ்ந்து
மோதல் நிலையை
….. மறக்கும் நிலவில்
வாதம் வேண்டாம்
….. வரமாய்க் கண்டோம்
பாதம் பணிந்து
….. பகர்வோம் நன்றி.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan