ஒளவை

ஆதவன்
========
ஆதவனே அருட்கடலே அழகே அன்பே
அருள்தருவாய் பூமிக்கே இரங்கி என்றும்
மோதவரும் தீமைகளை மேவி நின்று
மேன்மையுடன் உன்னிடமே தாங்கி ஏற்பாய்
மாதமெல்லாம் மாண்புடனே ஒளிர்ந்து மண்ணில்
மலர்கின்றாய் எங்களுக்குத் தெய்வம் போலே
நாதனாக உன்னையுந்தான் நாமும் எண்ணி
நவில்கின்றோம் நன்றிதனைத் தொழுது நாளும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading