ஒளவை

ஆதவன்
========
ஆதவனே அருட்கடலே அழகே அன்பே
அருள்தருவாய் பூமிக்கே இரங்கி என்றும்
மோதவரும் தீமைகளை மேவி நின்று
மேன்மையுடன் உன்னிடமே தாங்கி ஏற்பாய்
மாதமெல்லாம் மாண்புடனே ஒளிர்ந்து மண்ணில்
மலர்கின்றாய் எங்களுக்குத் தெய்வம் போலே
நாதனாக உன்னையுந்தான் நாமும் எண்ணி
நவில்கின்றோம் நன்றிதனைத் தொழுது நாளும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading