அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஒளியிலே தெரிவது..!!

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2057!!

ஒளியிலே தெரிவது..!!

விட்டில் பூச்சி வீழ்ந்தெழும் ஒளியோ
விருப்புடன் இருள் கலைக்குமோ
கரும்புகை உமிழ்ந்திடும் கலையோ
கருணை சிந்திடும் நிலை தானோ..

ஈகையின் குணம் உணர்த்தும் வழியோ
இனமானம் காக்க சென்றோர் நிழலோ
ஒளியிலே தெரிவது யாதெனக் கேளும்
ஓங்கார ரூபனின் விழியது தானோ..

வாழ்வினை இழந்தவனுக்கு வளமா
வண்ணக் கற்பனைக்கு கொடையோ
எண்ணச் சிதறலின் வரைபடமோ
வலி விலக்கி வழி காட்டி நீதானோ!!

உயிர்த்தியாகம் செய்தோர் வதனமோ
உறவினர் விழி நீரின் வடி கால்களோ
மண்ணுக்குள் மாணிக்கம் என்பதோ
திசை காட்டி விசைகூட்டும் ஆசானோ
சிவதர்சனி இராகவன்
14/11/2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading