அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஒளியேந்தும் காலம்

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரத்துக்காக..!!
கவி இலக்கம் 2060!!

இது ஒளியேந்தும்
காலம்..
தேசத்துக்காய் தம்மைத் தீயாக்கி
தியாக ஒளியில் ஒளிர்ந்தோர்
பூவாசம் போன்றதோர் அற்புத
மாந்தர் நினைவேந்திடவே
பூத்ததோ இந்தக் கார்த்திகையே
புதுவிடியலில் உனை வரவேற்போம்

ஆகுதியானவர் அழியாதெம்
நெஞ்சத்தாள்களில் கவிவரியாகி
கங்கை போலும் பெருக்கெடுக்கும்
நதி தீரத்தில் முக்குழித்தாலும்
பெருமை போதாதிவர் முன்னே
நாம் இக்கணமும் குறுகித்தான்..

காந்தளில் இதழ் தொட்டுக்
கனிந்த ஒளி தீபமிட்டுக்
காரிருள் மேனி தொடும் அந்த
நாளதனுக்காய் முதற்படி
நினைவுகளோடு மூழ்குகிறோ
இது கண்மணிகாள் திங்களாம்..!!
சிவதர்சனி இராகவன்
21/11/2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading