மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஒளியேந்தும் காலம்

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரத்துக்காக..!!
கவி இலக்கம் 2060!!

இது ஒளியேந்தும்
காலம்..
தேசத்துக்காய் தம்மைத் தீயாக்கி
தியாக ஒளியில் ஒளிர்ந்தோர்
பூவாசம் போன்றதோர் அற்புத
மாந்தர் நினைவேந்திடவே
பூத்ததோ இந்தக் கார்த்திகையே
புதுவிடியலில் உனை வரவேற்போம்

ஆகுதியானவர் அழியாதெம்
நெஞ்சத்தாள்களில் கவிவரியாகி
கங்கை போலும் பெருக்கெடுக்கும்
நதி தீரத்தில் முக்குழித்தாலும்
பெருமை போதாதிவர் முன்னே
நாம் இக்கணமும் குறுகித்தான்..

காந்தளில் இதழ் தொட்டுக்
கனிந்த ஒளி தீபமிட்டுக்
காரிருள் மேனி தொடும் அந்த
நாளதனுக்காய் முதற்படி
நினைவுகளோடு மூழ்குகிறோ
இது கண்மணிகாள் திங்களாம்..!!
சிவதர்சனி இராகவன்
21/11/2024

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading