சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஒளியேந்தும் காலம்

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரத்துக்காக..!!
கவி இலக்கம் 2060!!

இது ஒளியேந்தும்
காலம்..
தேசத்துக்காய் தம்மைத் தீயாக்கி
தியாக ஒளியில் ஒளிர்ந்தோர்
பூவாசம் போன்றதோர் அற்புத
மாந்தர் நினைவேந்திடவே
பூத்ததோ இந்தக் கார்த்திகையே
புதுவிடியலில் உனை வரவேற்போம்

ஆகுதியானவர் அழியாதெம்
நெஞ்சத்தாள்களில் கவிவரியாகி
கங்கை போலும் பெருக்கெடுக்கும்
நதி தீரத்தில் முக்குழித்தாலும்
பெருமை போதாதிவர் முன்னே
நாம் இக்கணமும் குறுகித்தான்..

காந்தளில் இதழ் தொட்டுக்
கனிந்த ஒளி தீபமிட்டுக்
காரிருள் மேனி தொடும் அந்த
நாளதனுக்காய் முதற்படி
நினைவுகளோடு மூழ்குகிறோ
இது கண்மணிகாள் திங்களாம்..!!
சிவதர்சனி இராகவன்
21/11/2024

Nada Mohan
Author: Nada Mohan