ஒளியேந்தும் காலம்

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரத்துக்காக..!!
கவி இலக்கம் 2060!!

இது ஒளியேந்தும்
காலம்..
தேசத்துக்காய் தம்மைத் தீயாக்கி
தியாக ஒளியில் ஒளிர்ந்தோர்
பூவாசம் போன்றதோர் அற்புத
மாந்தர் நினைவேந்திடவே
பூத்ததோ இந்தக் கார்த்திகையே
புதுவிடியலில் உனை வரவேற்போம்

ஆகுதியானவர் அழியாதெம்
நெஞ்சத்தாள்களில் கவிவரியாகி
கங்கை போலும் பெருக்கெடுக்கும்
நதி தீரத்தில் முக்குழித்தாலும்
பெருமை போதாதிவர் முன்னே
நாம் இக்கணமும் குறுகித்தான்..

காந்தளில் இதழ் தொட்டுக்
கனிந்த ஒளி தீபமிட்டுக்
காரிருள் மேனி தொடும் அந்த
நாளதனுக்காய் முதற்படி
நினைவுகளோடு மூழ்குகிறோ
இது கண்மணிகாள் திங்களாம்..!!
சிவதர்சனி இராகவன்
21/11/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading