ஒவ்வொரு இதயத்துள்ளும் மறைந்திருக்கும் தலைவன் பகுதி 1

ஜெயம்

ஆதவன் மண்ணில் உதித்த நாள்
வீரம் தன் கால்கள் பதித்த நாள்
தேசத்தின் நேசன் பிறந்தநாள்
புரட்சியின் விடியல் புலர்ந்த நாள்

தமிழினம் இருப்பது உலகுக்கு தெரிந்தது
போர்களின் தந்திரம் உன் பெயர் பதித்தது
பாருக்குள் பரந்துமே உன் புகழ் விரிந்தது
பெற்றிட்ட வெற்றிகள் வான்வரை உயர்ந்தது

அடிவாங்கி அடிவாங்கி அனைத்தையும் இழந்தோம்
அதிகாரப் பிடியினில் வாய் மூடிக்கிடந்தோம்
புயலெனப் பிறந்தான் இடியென இடித்தான்
இலக்குகள் கொண்டு விலங்கினை உடைத்தான்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading