தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன்

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும் மழைநீரை
வண்ணமுடன் ஏந்தி நிற்கும்
மண்வளமே!

தண்ணீருக்காய் திரண்ட மக்களுக்கு
மானிட தாகத்திற்காய்ப் பொழியாயோ?
போர் மேகம் குண்டு மழை பொழிய
பொல்லாத ஏவுகணைகள் மண்மீது வெடிக்க
தண்ணீருக்கு போரே தடையாக வந்ததோ!

வானமே எல்லையாய் வாழ்க்கையே உனைநோக்கி……
ககனத்துறும் மழைநீரே வாரிப்பொழிவாய்
வாழ்வாங்கு வாழ
தண்ணீருக்காய் திரளும் மேகமே!
தடையின்றி முனைப்போடு பொழிவாயோ?
படைசூழ்ந்து வந்தாலும்
பலமோடு பெய்யாயோ?

(ககனம்- வானம்)

நகுலா சிவநாதன் 1848

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading