மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஔவை

வலி
====
வலிய வருது விரட்டவும் வருது
சலிப்புக் காட்டச் சடுதியாய் வருது
எலிக்கும் வருது எருமைக்கும் வருது
கலியில் எங்கும் கனமாய் வருது

பலிகள் பெருகப் பக்கம் வருது
கிலியில் தள்ளிக் கெடுக்க வருது
நலியோர் தம்மை நசுக்க வருது
மலிவாய் எங்கும் மண்ணில் வருது

மரணம் காட்டி மாய்க்க வருது
இரவும் பகலும் எதிலும் வருது
உறவிலும் பகையிலும் உள்ளே வருது
மறக்க நினைத்தால் மறுபடி வருது

அலைபோல் தொடர்ந்து அழிக்க வருது
மலையெனப் பெருத்து மருட்ட வருது
குலைநடுங்க எமனாய்க் கொல்ல வருது
நிலையில்லா உலகில் நிலைக்க வருதோ?

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading