28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஔவை
காத்திருக்கும் காதலி…..
=======================
மூடுபனிக் காலமிது
முன்னிரவு நேரமிது
தேடுகிறேன் உன்னைத்
தெரியவில்லைக் கண்களுக்கு
வீடுசேர வழியுமில்லை
விடியலும் எனக்கில்லை
வாடுகின்றேன் ஏங்கியே
வந்துவிடு விரைவாக
காதலெனும் நோயால்
கனவுகளில் மிதக்கின்றேன்
மோதலின்றி இணைகிறேன்
மோகத்தில் மூழ்கிறேன்
வேதனை தாழவில்லை
வேறொரு வழியுமில்லை
சாதலைத் தவிர்த்துவிடச்
சடுதியாய் வந்துவிடு
காலங் கனியுமுன்
கைபிடிப்பேன் என்றாயே
காலங்கள் நீண்டு
காத்திருக்க வைத்தாயே
காலனவன் வருமுன்
கண்முன் வருவாயோ
காலச் சுழற்சியில்
காணாமல் போவாயோ
காதலில் காலங்கள்
கடந்தோடி விட்டது
காதல் மட்டுமின்று
கனவுடன் வாழுது
காதலைத் தந்துவிட்டு
காணாமல் போனாயே
காதலுடன் வந்து
கரையேற்றி வைப்பாயோ …
ஒளவை.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...