கஞ்சா

இ.உருத்திரேஸ்வரன்

பெரியோர்க்கஞ்சா சமூகமும்
மக்களுக்கஞ்சா அரசியல்வாதியும்
பெற்றோர்க்கஞ்சா பிள்ளைகளும்
உலகில் முன்னேறியது இல்லையே

சிவனுக்கஞ்சா நக்கீரன் போல
நீதிக்கஞ்சா மனிதரை எதிர்த்திட
திடங்கொள் மனிதா
முன்னேற்றம் காண்பாய் வாழ்வில்

உயிருக்கஞ்சா போரிட்ட எம்
வீரர்களின் கனவு நனவாகாமல்
இருந்த இடமும் பறிபோவதை
நினைக்கையில் கவலையே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading