கமலா ஜெயபாலன்

ஆசான்
அறிவைப் புகட்டி அன்பை தந்து
ஆதரிக்கும் யன்னை ஆசான் அவரே
தறிகெட்டுப் போகமல் தன்னைக் கொடுத்து
தரணியில் யேற்றும் தந்தை யாசான்
நெறிகொண்ட வாழ்வை நித்தமும் உயர்த்தி
நிலைக்கச் செய்யும் நேசன் ஆசான்
முறியாக் கல்வியை முழுதாய்ந் தந்து
முதல்வன் ஆக்கி முடியும் சூடுமாசான்/
ஆசானைப் போற்றுவோம் அறிவைப் பெருக்குவோம்
தாய் தந்தை பேணுவோம் தரணியில்
உயர்வோம்/
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading