இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

மொழி
கம்பனும் பாரதியும் கண்ண தாசனும்
கண்ட தமிழ் மொழியாம்
எம்மவர் போற்றும் ஏற்றமிகு எளிலான
எங்கள் தாய் மொழியாம்
குமரியில் தோன்றி குன்றினில் பாய்ந்து
கடாரம் வெண்ற மொழியாம்
கமகம எனவே காற்றுடன் கலந்து
கவிமழை கொட்டும் மொழியாம்

வல்லினம் மெல்லனம் வந்து இடையினம்
வல்லமை கொண்ட மொழியாம்
சொல்லில் சுடர்விடும் சுகங்கள் பலதரும்
சுந்தரத் தழிழ் மொழியாம்
மரபாய்த் தோன்றி மதியினால் வலம்வரும்
மங்காத தேன் மொழியாம்
வரமாய் வந்த வன்மொழி தனையே
வணங்கியே போற்றிப் புகழ்த்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading