28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
மொழி
கம்பனும் பாரதியும் கண்ண தாசனும்
கண்ட தமிழ் மொழியாம்
எம்மவர் போற்றும் ஏற்றமிகு எளிலான
எங்கள் தாய் மொழியாம்
குமரியில் தோன்றி குன்றினில் பாய்ந்து
கடாரம் வெண்ற மொழியாம்
கமகம எனவே காற்றுடன் கலந்து
கவிமழை கொட்டும் மொழியாம்
வல்லினம் மெல்லனம் வந்து இடையினம்
வல்லமை கொண்ட மொழியாம்
சொல்லில் சுடர்விடும் சுகங்கள் பலதரும்
சுந்தரத் தழிழ் மொழியாம்
மரபாய்த் தோன்றி மதியினால் வலம்வரும்
மங்காத தேன் மொழியாம்
வரமாய் வந்த வன்மொழி தனையே
வணங்கியே போற்றிப் புகழ்த்திடுவோம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.