இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

திருநங்கை
புரியாமை என்ற போக்கால் போர்க் களம்
மரிக்கும் வரையும் மனதை அரிக்கும்
தவிக்கும் உள்ளம் தாங்கோணாத் துன்பம்
தவிர்க்கும் குடும்பம் தன்பிள்ளை மறந்து/

கண்ட கனவுகள் காணாமற் போகும்
எண்ணங்கள் எல்லாம் இலக்கற்றும் ஓடும்
சொந்தம் பிரிந்து சேரும் தன்னினம்
வந்திடும் பெயரும் வகையாய் திருநங்கையென

கண்ணே கண்ணைக் குற்றிக் குடையும்
மண்ணில் மலர்ந்த மலர்கள் கருகும்
பண்பும் மாறி பரிகாசம் ஆகும்
புண்பட்ட வாழ்வும் போராய் முடியும்

வாழ்வு வேண்டும் வரமாய் வேண்டும்
தாழ்வு போக்கிய தகுதியும் வேண்டும்
மாழ்வு வராத மகத்துவம் வேண்டும்
காழ்வு அகற்றிய கண்ணியம் வேண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading