தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கமலா ஜெயபாலன்

திருநங்கை
புரியாமை என்ற போக்கால் போர்க் களம்
மரிக்கும் வரையும் மனதை அரிக்கும்
தவிக்கும் உள்ளம் தாங்கோணாத் துன்பம்
தவிர்க்கும் குடும்பம் தன்பிள்ளை மறந்து/

கண்ட கனவுகள் காணாமற் போகும்
எண்ணங்கள் எல்லாம் இலக்கற்றும் ஓடும்
சொந்தம் பிரிந்து சேரும் தன்னினம்
வந்திடும் பெயரும் வகையாய் திருநங்கையென

கண்ணே கண்ணைக் குற்றிக் குடையும்
மண்ணில் மலர்ந்த மலர்கள் கருகும்
பண்பும் மாறி பரிகாசம் ஆகும்
புண்பட்ட வாழ்வும் போராய் முடியும்

வாழ்வு வேண்டும் வரமாய் வேண்டும்
தாழ்வு போக்கிய தகுதியும் வேண்டும்
மாழ்வு வராத மகத்துவம் வேண்டும்
காழ்வு அகற்றிய கண்ணியம் வேண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan