மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில் பொங்கியே புத்தொளி மலரட்டும் புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும் புவியாழும் இறையோனின் பார்வையாய் இருளான...

Continue reading

கமலா ஜெயபாலன்

பாட்டி
பாட்டியுடன் கைபிடித்து பக்குவமாய் நடைநடந்து
ஊட்டிவிட்ட சோறுண்டும் ஓடியாடி விளையாடி
கூட்டிவைத்து எமையெல்லாம் கதைகள் சொல்லி
வீட்டையும் வெளிச்சமாக்கி விருப்பமாய் வாழவைப்பார்

பண்புடன் பக்கவமும் பௌவியமாச் சொல்லி
கண்போல எமைக்காக்க கடவுள் தந்தவரம்
புண்படாமல் எமைக்காத்துப் பொக்கிசமாய் வளர்த்து
மண்ணில் எழுத்தெழுதி மகிழ்வித்த காலமெங்கே

முந்தானை முடிச்சினிலே முடிந்திருக்கும் பணத்தை
எந்தனுக்காய் செலவிடுவார் இச்சையுடன் மனமுவந்து
வந்து மணியடிக்கும் வாய்க்குக் குளிர்கழியும்
தந்து மகிழ்ந்திடுவார் தானும் உருசித்திடுவார்

சோறு குழைத்துச் சுவையாகத் தந்துடுவார்
கூறுபோட்டு தின்பண்டம் கொடுத்து மகிழ்ந்துடுவார்
வேறுபாடு பார்க்காமல் விருப்பமுடன் பேர ர்களுக்கு
வீறுடனே நோய்தீர்ப்பார் நொந்து மனமுடைவார்

என்பாட்டி தங்கம் எண்ணிலாச் சொர்க்கம்
தன்பாட்டில் வேலையெலாம் சடுதியிலே செய்திடுவார்
கதையும் பழமொழியும் கண்ணியமாய்ச் சொல்லிடுவார்
எதைச் செய்தாலும் என்னுடைய பாட்டிபொன்

Nada Mohan
Author: Nada Mohan