மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

பாட்டி
பாட்டியுடன் கைபிடித்து பக்குவமாய் நடைநடந்து
ஊட்டிவிட்ட சோறுண்டும் ஓடியாடி விளையாடி
கூட்டிவைத்து எமையெல்லாம் கதைகள் சொல்லி
வீட்டையும் வெளிச்சமாக்கி விருப்பமாய் வாழவைப்பார்

பண்புடன் பக்கவமும் பௌவியமாச் சொல்லி
கண்போல எமைக்காக்க கடவுள் தந்தவரம்
புண்படாமல் எமைக்காத்துப் பொக்கிசமாய் வளர்த்து
மண்ணில் எழுத்தெழுதி மகிழ்வித்த காலமெங்கே

முந்தானை முடிச்சினிலே முடிந்திருக்கும் பணத்தை
எந்தனுக்காய் செலவிடுவார் இச்சையுடன் மனமுவந்து
வந்து மணியடிக்கும் வாய்க்குக் குளிர்கழியும்
தந்து மகிழ்ந்திடுவார் தானும் உருசித்திடுவார்

சோறு குழைத்துச் சுவையாகத் தந்துடுவார்
கூறுபோட்டு தின்பண்டம் கொடுத்து மகிழ்ந்துடுவார்
வேறுபாடு பார்க்காமல் விருப்பமுடன் பேர ர்களுக்கு
வீறுடனே நோய்தீர்ப்பார் நொந்து மனமுடைவார்

என்பாட்டி தங்கம் எண்ணிலாச் சொர்க்கம்
தன்பாட்டில் வேலையெலாம் சடுதியிலே செய்திடுவார்
கதையும் பழமொழியும் கண்ணியமாய்ச் சொல்லிடுவார்
எதைச் செய்தாலும் என்னுடைய பாட்டிபொன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading