இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கமலா ஜெயபாலன்

பரவசம்
—-//////——-/////
பாடும் பாட்டில் பரவசமாகி
பக்தன் கண்டான் பரமனையே
கூடும் கூட்டம் கொண்டாட்டம்
குடும்பம் கானும் குதுகலமே
வாழும் வாழ்வும் வளமானால்
வசந்தம் காணும் வையகமும்
தேடும் சொந்தம் தித்திப்பாய்
திகழ்ந்தால் வாழ்வில் பரவசமே

அன்னை தந்தை அரவணைப்பில்
அன்பாய் வாழ்தல் பாக்கியம்
உலகம் போற்றும் உத்தமனாய்
உதித்தால் மகவும் பாரினில்
பிள்ளை பெற்ற பெருமையினால்
பெற்றோர் காண்பார் பேரின்பம்
தொற்றும் நீங்கிப் பதியினில்
சுகமாய் வாழ்த்தால் பரவசமே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading