நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம்
—————————————
வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய்
தருவாய் நலன்பல தந்து-கருவாகும்
நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட
நல்கிடுவாய் நற்சீர் நமக்கு

ஏர்பிடித்தார் தந்தை எழுத்தும் அறிவித்தார்
பார்போற்றப் பக்குவமாய் படிப்பித்தார் -ஏர்பூட்டி
ஏழ்மை தெரியாமல் ஏற்ற உழவனாய்
வாழ்வை வளமாக்கியும் வாழ்ந்து

பொங்கலும் பொங்க பகலவன் தோன்றிடவும்
சங்கும் முழங்கி சொந்தங்கள்-பங்கேற்கும்
சுவையான நாட்களும் சுதந்திரமாய் வந்தால்
இவையனத்தும் இன்பமாகும் என்று

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan