கமலா ஜெயபாலன்

மாட்சிமை மிக்க மகாராணி
அன்பில் சிறந்த ஆளுமை மிக்க
பன்பில் பனித்த பக்குவ மங்கை
இளமை வயதினில் இல்லாள் ஆகி
தளரா மனத்துடன் தாங்கி மனைவியாய்
மகவுகள் பெற்று மகாராணிப் பட்டமும்
தகவுடன் ஏற்றுத் தாரணி ஆண்டு
மக்களை மனதால் மகழ்வித்த மாட்சிப்
பக்குவம் கண்டோம் போய்வா பொக்கிசமே!

கலாசாரம் பேணி காத்தார் குடும்பம்
கடமை கொண்டு காரியம் ஆற்றி
உலக சமாதானம் உணர்வுடன் பேணி
உண்மையாய் வாழ்ந்த உத்தமி இவரே
எழுபது ஆண்டுகள் இளமை மனதுடன்
பழுதுகள் இன்றி பதவியில் உயர்த்து
வாழ்ந்தார் வடிவாய் வையகம் போற்ற
போய்வா மகளே போய்வா மாகாராணியே!

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading