” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

அலையோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
அலையின் ஓட்டம் அதிருது உலகம்
கலையும் காவியமும் கைக்குள் அடக்கம்
மலையென மக்கள் மயங்குக் கிடந்து
தலையைத் தொலைத்து சங்கடம் கொள்கிறார்

காலை தொடங்கினால் கைக்குள் அலைபேசி
மாலை வந்தும் மறந்திட முடியாமை
வேலை எல்லாம் வெட்டியாய் கிடக்க
தலையில் கைவைத்துத் தவிக்குது குடும்பம்

அலையோசை ஆடிவந்து அடங்கிப் போகும்
காலை நனத்துக் கழுவும் இன்பம்
வெள்ளை நுரையும் வீசும் காற்றும்
கள்ளமில்லாக் கண்ணிற்கு இனிமை

இசையின் நாதம் இனிதாம் வாழ்வில்
அலையாய் வந்து ஆனந்தம் கொள்ளும்
கலையின் நாதம் கணீரென அலையாய்
சிலையும் பேசும் சித்தம் நெகுழும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan