கமலா ஜெயபாலன்

மீண்டு எழு
புதைந்த விதைகள்
புதிதாய் முளைக்கும்
விதையும் முழைத்து வீச்சுடன் வளரும்
பட்ட மரமும் பாதயில் துளிர்க்கும்
விட்டுப் போன உறவும் ஒட்டும்

வீழ்தோம் என்பது வெட்டிப் பேச்சு
எழுவோம் என்பதே இயல்பின் உறுதி
மீண்டும் எழுவோம் மீழ்வோம் வாழ்வில்
தாண்டுவோம் சகதியை தனித்துவம் காண்போம்

காலம் மாறும் காட்சிகள் மாறும்
ஞாலம் தன்னில் நல்லது நடக்கும்
மாயமில்லை மந்தரமில்லை மீண்டும் எழுவாய்
நேயமாய் கற்றால் நீயெழுவாய் மீண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading