கமலா ஜெயபாலன்

மாவீரரே
தாய் மண்காக்க தியாகம் செய்த
பாய்யும் இன்றி பட்டிணி கிடந்து
காயந்த உணவும் கண்ணுக்கு எட்டாமல்
மாய்ந்த எங்கள் மாவீர்ரே எழுவீர்/

தாய் மனமும் தடுமாற தயாரானீர்
நோய் கண்ட நேரமும் நெருப்பானீர்
சேய்யைத் தேடிச் சித்தம் கலங்கி
ஓய்ந்த தாய்க்காய் எழுவீர் மாவிர்ரே/

எத்னை எங்கள் இனத்தவரை இழந்தோம்
அத்தனையும் அமிர்தம் அன்றோ எமக்கு
முத்தான எம்மினம் முடங்கியது ஏனோ
சத்தாக மீண்டும் சாதனை படைப்போம்/

அவலம் காக்க அரும்புங்கள் துளிராய்
தவமாய் கிடைத்த தங்கங்கள் நீங்கள்
அங்கம் இழந்து அல்லல் படுகின்ற
சொந்தங்கள் காக்க சத்தமின்றி வாரும்/

உறவுகள் பிரிந்தே உவாதைப் படுகின்ற
மறவரைக் காக்க மாவீரரே எழுக
எம்மினம் காக்க இழந்தோம் இன்னுயிகள்
எம்மவர் யாவர்க்கும் ஏற்றுவோம் தீபம்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading