இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

அன்று என்னை உலகற்கு அளித்தாய்
இன்று உன்னை எண்ணிப் புலம்புகிறேன்
கண்ணாய் என்னைக் காத்து வளர்த்தாய்
மண்ணில் உயர்த்த வண்ணம் குவித்தாய்

எத்தனை யோசனை இதயத்தில் இன்று
அத்தனையும் இழந்து அகதியாய் வந்த
அந்த நாளை யோசித்து வருந்துவதா
உப்புச் சிரட்டையும் மிஞ்சாத ஊர்கதை

சொல்லச் சொல்லச் சோகம் வருகுதே
மெல்ல இதய மேனி நடுங்குதே
வெல்ல முடியுமா விதியை மதியால்
இல்லத்து உறவுகளை இழந்த காலத்தை

உற்ற உறவுகள் ஊர்விட்டு போனதும்
கற்ற கல்வியை குறையில் விட்டதும்
இப்படி இப்படி எத்தனை யோசனை
என்று மறையும் இத்தனை யோசனைகள்/

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading