சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

பிறந்தமனை
இதயத்தின் எழில் இன்பத்தின் சுரங்கம்
உதயத்தின் ஊற்று உண்மையின் இருப்பு
வதனத்தின் அழகு வற்றாத அன்பு
பதனிடும் பள்ளி பாசத்தின் உறைவு

துள்ளித் திரிந்தோம் துடிப்பாய் வாழ்ந்தோம்
பள்ளி சென்றோம் பந்தும் ஆடினோம்
அள்ளியும் அனைக்க அன்னையுடன் சுற்றம்
வெள்ளி நிலாவினில் விளையாடிய சுகங்கள்

இறந்த காலம் இனியும் வருமா
மறந்து போக மனமும் இல்லையே
பறந்து வந்தோம் பலதையும் மறந்தோம்
பிறந்த மனையின் பிரசவ வேதனை

ஒன்றிய குடும்பம் ஒவ்வொன்றாய்ப் பிரிய
நின்று நிலைக்க நின்மதி இன்றி
அன்று பட்ட அவல நிலையால்
இன்றும் வாடுதே எங்கள் இதயம்/

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading