” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பிறந்தமனை
இதயத்தின் எழில் இன்பத்தின் சுரங்கம்
உதயத்தின் ஊற்று உண்மையின் இருப்பு
வதனத்தின் அழகு வற்றாத அன்பு
பதனிடும் பள்ளி பாசத்தின் உறைவு

துள்ளித் திரிந்தோம் துடிப்பாய் வாழ்ந்தோம்
பள்ளி சென்றோம் பந்தும் ஆடினோம்
அள்ளியும் அனைக்க அன்னையுடன் சுற்றம்
வெள்ளி நிலாவினில் விளையாடிய சுகங்கள்

இறந்த காலம் இனியும் வருமா
மறந்து போக மனமும் இல்லையே
பறந்து வந்தோம் பலதையும் மறந்தோம்
பிறந்த மனையின் பிரசவ வேதனை

ஒன்றிய குடும்பம் ஒவ்வொன்றாய்ப் பிரிய
நின்று நிலைக்க நின்மதி இன்றி
அன்று பட்ட அவல நிலையால்
இன்றும் வாடுதே எங்கள் இதயம்/

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan