கமல் ஜெயபாலன்

கலவரம்

அன்று ஒருநாள் அவலம் நடந்தது
இன்றும் இருக்கிறது இதயத்தில் அதுவும்
கொன்று குவித்தனர் கொழுத்தி எரித்தனர்
ஒன்றும் இல்லாமல் ஓடி வந்தனர்

சொத்து உள்ளவன் சுகத்துடன் இருந்தான்
செத்து மடிந்தவன் சினத்துடன் இருந்தான்
எத்திக்கும் இல்லாமல் எத்தனை பேர்
அத்தனை பேரும் அகதிகள் ஆயினர்

அரசன் அன்று அறுப்பான் எனபதும்
இறைவன் நின்று அறுப்பான் என்பதும்
இன்று காண்கின்றோம எமது நாட்டில்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

    Continue reading