பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கமல் ஜெயபாலன்

கலவரம்

அன்று ஒருநாள் அவலம் நடந்தது
இன்றும் இருக்கிறது இதயத்தில் அதுவும்
கொன்று குவித்தனர் கொழுத்தி எரித்தனர்
ஒன்றும் இல்லாமல் ஓடி வந்தனர்

சொத்து உள்ளவன் சுகத்துடன் இருந்தான்
செத்து மடிந்தவன் சினத்துடன் இருந்தான்
எத்திக்கும் இல்லாமல் எத்தனை பேர்
அத்தனை பேரும் அகதிகள் ஆயினர்

அரசன் அன்று அறுப்பான் எனபதும்
இறைவன் நின்று அறுப்பான் என்பதும்
இன்று காண்கின்றோம எமது நாட்டில்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading