” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமல் ஜெயபாலன்

கலவரம்

அன்று ஒருநாள் அவலம் நடந்தது
இன்றும் இருக்கிறது இதயத்தில் அதுவும்
கொன்று குவித்தனர் கொழுத்தி எரித்தனர்
ஒன்றும் இல்லாமல் ஓடி வந்தனர்

சொத்து உள்ளவன் சுகத்துடன் இருந்தான்
செத்து மடிந்தவன் சினத்துடன் இருந்தான்
எத்திக்கும் இல்லாமல் எத்தனை பேர்
அத்தனை பேரும் அகதிகள் ஆயினர்

அரசன் அன்று அறுப்பான் எனபதும்
இறைவன் நின்று அறுப்பான் என்பதும்
இன்று காண்கின்றோம எமது நாட்டில்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan