மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் –

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
மொழிகளின் மூலமாய் மௌனம் கலைத்தாய்/
விழிதிறந் தெம்மை விஞ்ஞா னத்தினை/
பயில வைத்த அழகிய பெண்ணே/
உயிரெனத் தோன்றி உலகினைக் காட்டி/
காசினி மேலே கருத்தை விதைத்தே/
ஆசின் றியவள் அருந்தமிழ்த் தாயே/
எழுத்தின் வரிஒலி இயங்கியல் காட்டி/
முழுதும் முக்கால மும்தான் அழியா/
நிலையை நித்தமும் நிறுத்தி பாரிலே/
அலையே அடித்தாலும் அடங்கா வீரம்/
வரப்பெற் றோமே வரமாய் உன்னால்/
அரம்போல் கூர்மை அறிஞர் பெறவுமே/
பூப்போல் பூத்த புதுமைத் தாயே/
தீப்போல் எழுந்து தீப்பற வையாய்/
பறந்து பறந்து பறந்தெங் கும்தான்/
சிறந்து சிறந்து சித்திரம் போலாய்/
கடலெனக் கொடுத்துக் கஞ்சம் இன்றியே/
உடமை பலதும் உடையாள் நீயே/
ஐம்பெரும் காப்பியமும் ஐந்திலக் கணமும் /
அம்மெனத் தந்தாய் அடங்கா கடலாய்/
ஆர்ப்பரிக் கின்ற அற்புதப் பனுவலின்/
வேராய்த் திகழும் வேங்கை நீயே/
தருவாய் நிமிர்ந்து தமிழால் தமிழை/
உருவாய் வளர்த்த உலகின் தெய்வமே/

-கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் – இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading