முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் –

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
மொழிகளின் மூலமாய் மௌனம் கலைத்தாய்/
விழிதிறந் தெம்மை விஞ்ஞா னத்தினை/
பயில வைத்த அழகிய பெண்ணே/
உயிரெனத் தோன்றி உலகினைக் காட்டி/
காசினி மேலே கருத்தை விதைத்தே/
ஆசின் றியவள் அருந்தமிழ்த் தாயே/
எழுத்தின் வரிஒலி இயங்கியல் காட்டி/
முழுதும் முக்கால மும்தான் அழியா/
நிலையை நித்தமும் நிறுத்தி பாரிலே/
அலையே அடித்தாலும் அடங்கா வீரம்/
வரப்பெற் றோமே வரமாய் உன்னால்/
அரம்போல் கூர்மை அறிஞர் பெறவுமே/
பூப்போல் பூத்த புதுமைத் தாயே/
தீப்போல் எழுந்து தீப்பற வையாய்/
பறந்து பறந்து பறந்தெங் கும்தான்/
சிறந்து சிறந்து சித்திரம் போலாய்/
கடலெனக் கொடுத்துக் கஞ்சம் இன்றியே/
உடமை பலதும் உடையாள் நீயே/
ஐம்பெரும் காப்பியமும் ஐந்திலக் கணமும் /
அம்மெனத் தந்தாய் அடங்கா கடலாய்/
ஆர்ப்பரிக் கின்ற அற்புதப் பனுவலின்/
வேராய்த் திகழும் வேங்கை நீயே/
தருவாய் நிமிர்ந்து தமிழால் தமிழை/
உருவாய் வளர்த்த உலகின் தெய்வமே/

-கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் – இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading