கவிதையெனக் கிறுக்கினேன்(52)…

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025

ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள் பலவாகி
தொக்கிநிற்கும் நினைவுகளும் மேலாகி

ஆழ்மனது எண்ணமெல்லாம் கொட்டித்தீர்த்து
அலைபாயும் அருவியாய் ஊற்றெடுக்க
சிறுகதையும் நாடகமும் சிறகடிக்க
சிறுகவிதையும் பட்டிமன்றமும் சிங்காரிக்க

தளமொன்று தந்தவரை தலைவணங்கி
தாழ்வுமினி வேண்டாமென அரங்கேறி
எழுத்தாக புனைந்து அள்ளி எழுதித்தள்ளி கவிதையெனக் கிறுக்கினேன் தமிழேகேள்!

தாய்மண்பற்று தரமாயுண்டு என்னிடமும்
தமிழை ஆழ்ந்து படிக்காவிடினும்
தமிழின் அழகில் மயங்கி நானும்
தலையாய கடமையெனக் காப்பேன்..

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading