கவிதை என்றாலே….:

ரஜனி அன்ரன் ( B.A)….கவிதை என்றாலே…. 19.03.2026

அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம் கவிதை
விழிசொல்லத் துடிக்கும் வலிகளை
வலிக்காமல் வரிப்பது கவிதை
மனிதமனத்தின் சுவாசமே கவிதை !

வெறும்வார்த்தை ஜாலமல்ல
வெற்றுத்தாளின் கறுப்புப் புள்ளியில்
வீழும் கண்ணீர்த் துளியின் காவியம் கவிதை
சொற்களின் சாம்ராச்சியத்தில்
சொக்க வைக்கும் அதிசயம் கவிதை
வார்த்தைச் சிறைக்குள் சிக்கிக் தவிக்கும்
வண்ணத்து ஓவியம் தான்கவிதை !

பேனா முனையில் பிறக்கும்
பிரபஞ்சத்தின் இரகசியம் கவிதை
நினைவுப் பெட்டகத்தின்
நீங்காத காவியம் கவிதை
மொத்தத்தில் உள்ளத்தின் உணர்வில்
உணர்வின் தெறிப்பில் உயிர்ப்பாகுமே கவிதை !

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading