மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கவி இல(125) 21/03/24 எப்படி வலித்திருக்கும்

குறையுள்ள மனிதரே
குறையில்லா மனிதரை
குற்றவாளியென்று
தீர்ப்பு சொன்னால்
எப்படி வலித்திருக்கும்

ஏளனமும் துன்பமும்
எள்ளி நகையாடலும்
மறுதலிப்பும் வேதனையும்
மரண வாதையாய்
எப்படி வலித்திருக்கும்

உண்மையே பேசி
நன்மையே செய்தவரை
கத்தியும் ஈட்டியுமாய்
கடும் கசை நீட்டிட
எப்படி வலித்திருக்கும்

சிலுவைச் சுமையுடன்
கரடு மரடு பாதையிலே
முள் மேல் நடந்து
கல்வாரி சென்ற இயேசுவுக்கு
எப்படி வலித்திருக்கும்

கையிலும் காலிலும்
இரும்பாணி துளையிட
தலையிலே கூரிய முள்முடி ஏறிட
தாகமென்று மொழிந்து
தன்னுயிர் ஈந்தாரே ஐயோ ,,,
என் இயேசுவுக்கு
எப்படி வலித்திருக்கும்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading