இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

காத்தா பரமானந்தன்

தீபாவளி!

இல்லமும் உள்ளமும்
இன்பத்தில் மலர்ந்திருக்க
அல்லவை போக்கியுமே
ஆவளியாய்த் தீபமேற்றி
நல்லோர்கள் காட்டிய
நன்நாளாம் தீபாவளி!

மத்தாப்புச் சிதறலாய்
மகிழ்வது அணைத்திருக்க
புத்தாடை பட்சணங்கள்
போகமாய் நிறைத்திட
கொத்தாக உறவுகூடி
கொண்டாட்டம் போடும்
வித்தார விழாவாய்
விருந்திடும் தீபாவளி!

அரக்கரரின் போர்வதைகள்
அகிலத்தில் ஒழிந்தே
அமைதிப் பூங்காவில்
அன்பினை விதையாக்கி
ஆனந்த அறுவடையில்
அனைவரும் கொண்டாடுவோம்
அலோலமாய்த் தீபாவளி!

கீத்தா பரமானந்தன்06-12-23

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading