மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

காலமழை…

வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே தாயகம்
உறவுகள் ஊரவர் கலங்கிட
தொடர்புகளற்று தவித்திட
காலமழையாய் பெருகியே கணதி தந்தது இயற்கையே
அனுதின வாழ்வில் அனர்த்தங்கள்
அல்லற்படும் சொந்தங்கள்
மருத்துவமற்ற நோயாளர்
பாலங்கள் உடைந்த கோலங்கள் பாதைகளற்ற பயணங்கள் ஏதிலி வாழ்வே இடராக இருப்பிடம் அகன்று துயர் தாங்க உறவுகள் இழப்பில் ஊசாடும் வாழ்வியல் சோகம் வரலாறாய் எதிர்காலமும் இடரில் இருளுதே
கால மழையே காவு கொள்ளதே
பாவம் உயிரினம்
பாதை விலக்காதே!நன்றி

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading