04
Feb
இரா.விஜயகௌரி
மெல்லப் பேசும் சின்ன வரிகளுள்
சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை
வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல்
செல்வதற்காய்...
04
Feb
நினைவின் ஓரத்தில்..
-
By
- 0 comments
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால்...
04
Feb
உருமாறும் பனித்துளிகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இரவு பகல் ஓய்வின்றித்
தூவிய பனி முட்டைகள்
இலை உதிர்ந்த மொட்டை
மரங்களில் வட்டப்...
கீத்தா பரமானந்தன்
நடிப்பு !சந்தம் சிந்தும்சந்திப்பு
கள்ளமே உருவாய்க் கணமெலாம் அரங்கேறிக்
காலமும் தொடரும் காத்திரமாம் படைப்பு!
உள்ளத்தை மறைத்து உதட்டின் பசப்பால்
உணர்வினை வாட்டும் ஒப்பற்ற நடிப்பு!
மேடைகள் இன்றே மிளிர்கின்ற வனப்பு
மேதினி மனிதரின் மேலாம் வரிப்பு!
சோடையே யின்றிச் சொரிகின்ற பரிவில்
சொருகுறார் வாளினை சொடிக்கிடும் நொடிக்குள்!
நாளிலும் பொழுதிலும் நரித்தனம் நிறைப்பு
நம்பியே வீழுதல் நலிவற்றுத் தொடர்வு!
ஆறறி வென்றுமே. அனுதினம் பசப்பு
ஆற்றிடும் செயலதோ ஆழக்குழி பறிப்பு!
ஒட்டியே அழிக்கும் ஒட்டுண்ணி போலே
ஒன்றியே புதைக்கும் ஓங்கிய நடிப்பில்
பட்டமே வாங்காப் பண்டிதர் என்றே
பச்சோந்திக் கூட்டம் பரவியே நின்று
சத்தமே இன்றி வீழ்த்துவர் நொடியில்
சாதனை காணாச் சரித்திர நடிப்பில்!
கீத்தா பரமானந்தன்
03-05-2023
Author: Nada Mohan
03
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்...
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு...
02
Feb
-
By
- 0 comments
கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும்...
02
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026
பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று...