வரமாகும் வாய்ப்புக்களே…

வசந்தா ஜெகதீசன் வரமாகும்வாய்ப்புகளே.... வாழ்வெனும் மலர்த்தோப்பு மலர்ந்திடும் வேளை வரங்கள் பல எமதாகும் வாய்ப்பிற்குள் நாளை இருசுடராய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நடிப்பு !சந்தம் சிந்தும்சந்திப்பு

கள்ளமே உருவாய்க் கணமெலாம் அரங்கேறிக்
காலமும் தொடரும் காத்திரமாம் படைப்பு!
உள்ளத்தை மறைத்து உதட்டின் பசப்பால்
உணர்வினை வாட்டும் ஒப்பற்ற நடிப்பு!
மேடைகள் இன்றே மிளிர்கின்ற வனப்பு
மேதினி மனிதரின் மேலாம் வரிப்பு!
சோடையே யின்றிச் சொரிகின்ற பரிவில்
சொருகுறார் வாளினை சொடிக்கிடும் நொடிக்குள்!

நாளிலும் பொழுதிலும் நரித்தனம் நிறைப்பு
நம்பியே வீழுதல் நலிவற்றுத் தொடர்வு!
ஆறறி வென்றுமே. அனுதினம் பசப்பு
ஆற்றிடும் செயலதோ ஆழக்குழி பறிப்பு!
ஒட்டியே அழிக்கும் ஒட்டுண்ணி போலே
ஒன்றியே புதைக்கும் ஓங்கிய நடிப்பில்
பட்டமே வாங்காப் பண்டிதர் என்றே
பச்சோந்திக் கூட்டம் பரவியே நின்று
சத்தமே இன்றி வீழ்த்துவர் நொடியில்
சாதனை காணாச் சரித்திர நடிப்பில்!

கீத்தா பரமானந்தன்
03-05-2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading