19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
கீத்தா பரமானந்தன்
நட்பு!
எங்கிருந்தோ வந்து
எப்போதும் நிழலாகி
பங்கமற்ற நேசமாய்
படர்ந்திடும். நட்பு
உள்ளத்தைப் பகிர்ந்து
உரிமையாய் அதட்டி
தெள்ளிய நீராய்த்
தொடரும் பந்தம்
பருவம் கடந்தும்
பாலமிடும் பிணைப்பு
கருவம் பாராது
காவலாய் நின்று
வருமிடர் போக்கிட
வாஞ்சையாய் உழைக்கும்
மருவது காணா
மனிதத்தின் உறவு
என்பையும் உருக்கும்
எல்லையும் மீறும்
அன்னை தந்தையை
அணைப்பினில் மிஞ்சும்
தன்னலம் மறந்து
தாங்கிடும் தோழாய்
பின்னிடும் ஆயுளின்
பரவசம் இதுவாய்
பாலினம் மறந்து
பரவசம் கொண்டே
பாரியும் ஔவையும்
பகிர்ந்த மேன்மை
கூரிய முனையாய்
கோர்த்துமே வாழ்வை
மாரியாய்ப் பொழியும்
மனதினில் பசுமை
கீத்தா பரமானந்தன்
29-12-2021
Author: Nada Mohan
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...