கீத்தா பரமானந்தன்

நட்பு!

எங்கிருந்தோ வந்து
எப்போதும் நிழலாகி
பங்கமற்ற நேசமாய்
படர்ந்திடும். நட்பு
உள்ளத்தைப் பகிர்ந்து
உரிமையாய் அதட்டி
தெள்ளிய நீராய்த்
தொடரும் பந்தம்

பருவம் கடந்தும்
பாலமிடும் பிணைப்பு
கருவம் பாராது
காவலாய் நின்று
வருமிடர் போக்கிட
வாஞ்சையாய் உழைக்கும்
மருவது காணா
மனிதத்தின் உறவு

என்பையும் உருக்கும்
எல்லையும் மீறும்
அன்னை தந்தையை
அணைப்பினில் மிஞ்சும்
தன்னலம் மறந்து
தாங்கிடும் தோழாய்
பின்னிடும் ஆயுளின்
பரவசம் இதுவாய்

பாலினம் மறந்து
பரவசம் கொண்டே
பாரியும் ஔவையும்
பகிர்ந்த மேன்மை
கூரிய முனையாய்
கோர்த்துமே வாழ்வை
மாரியாய்ப் பொழியும்
மனதினில் பசுமை

கீத்தா பரமானந்தன்
29-12-2021

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading