இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நட்பு!

எங்கிருந்தோ வந்து
எப்போதும் நிழலாகி
பங்கமற்ற நேசமாய்
படர்ந்திடும். நட்பு
உள்ளத்தைப் பகிர்ந்து
உரிமையாய் அதட்டி
தெள்ளிய நீராய்த்
தொடரும் பந்தம்

பருவம் கடந்தும்
பாலமிடும் பிணைப்பு
கருவம் பாராது
காவலாய் நின்று
வருமிடர் போக்கிட
வாஞ்சையாய் உழைக்கும்
மருவது காணா
மனிதத்தின் உறவு

என்பையும் உருக்கும்
எல்லையும் மீறும்
அன்னை தந்தையை
அணைப்பினில் மிஞ்சும்
தன்னலம் மறந்து
தாங்கிடும் தோழாய்
பின்னிடும் ஆயுளின்
பரவசம் இதுவாய்

பாலினம் மறந்து
பரவசம் கொண்டே
பாரியும் ஔவையும்
பகிர்ந்த மேன்மை
கூரிய முனையாய்
கோர்த்துமே வாழ்வை
மாரியாய்ப் பொழியும்
மனதினில் பசுமை

கீத்தா பரமானந்தன்
29-12-2021

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading