தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கீத்தா பரமானந்தன்

விருப்பு! சந்தம் சிந்தும் சந்திப்பு!

வாழ்வின் துருப்பாகி
வலைவீசும் மூர்க்கம்
காழ்ப்பை உருவாக்கும்
கடிவாளமில்லா ஊக்கம்!
தோப்பாகி நிலைப்பதற்கும்
துணையாகும் பாகம்
ஆப்பாகி வீழ்த்திடும்
அகன்றிடும் போதில்!

விருப்பதே வாழ்வாய்
வீறுடை கணமாய்
ஒறுப்புக்கள் தாங்கி
உயர்த்திடும் ஏணியாய்!
விருப்புடை உழைப்பு
விண்ணையும் முட்டும்
பொறுப்புடை மனிதனாய்ப்
பூமியில் நிறுத்தும்!

மருப்பினை ( மயக்கம்) விட்டு
விருப்பினைக் கொண்டோரே
பெருக்கமாய் நிலைத்தே
பேசுபொருள் ஆனார்
தருக்களாய் உயர்ந்தார்
தரணியில் வரலாறாய்!

கீத்தா பரமானந்தன்30-01-2023

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading