” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

^மாவீரர்கள்

பொங்குது பொங்குது உணர்வலைகள்
போர்கொண்ட தேசத்தின் நினைவலைகள்
செங்களமாடிய வேங்கைகளின்
மங்காப் புகழ் கொண்ட மாவீரநினைவுகள்

வாழ்வினை துச்சமாய் வரித்துக் கொண்டார்
வரலாறு படைத்திட வலி சுமந்தார்
பாருக்குள் மனிதராய் வாழ்ந்து சென்றார்
பலமாக மனங்களில் நிலைத்துவிட்டார்
மாவீரர் சரிதங்கள் பலநூறு
சரித்திரமாவது சில நூறு
ஆசைக்கு தீயை அவனிடடன்
அன்னைமண் விடுவிக்க போரிட்டான்

வீரர்கள் முன்னே நாங்களெல்லாம்
வேரற்ற வெறும் மரங்கள்தான்
வேண்டுதல் செய்வோம் வீரர்களை
விடுதலை நமக்கு கிட்டிடட்டும்

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan