சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

கீத்தா பரமானந்தன்

^மாவீரர்கள்

பொங்குது பொங்குது உணர்வலைகள்
போர்கொண்ட தேசத்தின் நினைவலைகள்
செங்களமாடிய வேங்கைகளின்
மங்காப் புகழ் கொண்ட மாவீரநினைவுகள்

வாழ்வினை துச்சமாய் வரித்துக் கொண்டார்
வரலாறு படைத்திட வலி சுமந்தார்
பாருக்குள் மனிதராய் வாழ்ந்து சென்றார்
பலமாக மனங்களில் நிலைத்துவிட்டார்
மாவீரர் சரிதங்கள் பலநூறு
சரித்திரமாவது சில நூறு
ஆசைக்கு தீயை அவனிடடன்
அன்னைமண் விடுவிக்க போரிட்டான்

வீரர்கள் முன்னே நாங்களெல்லாம்
வேரற்ற வெறும் மரங்கள்தான்
வேண்டுதல் செய்வோம் வீரர்களை
விடுதலை நமக்கு கிட்டிடட்டும்

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading