அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பாமுகமே வாழி!

பாரொளிரும் கதிரொளியாய்
பரவசத்தின் ஊற்றாய்
எழுத்தில் பூத்திட்ட
எழிலான நந்தவனம்!
நாளெல்லாம் மிளிர்கின்ற
நாற்றுக்களின் பட்டறை!

ஆழத் திறனறிந்து
ஆற்றலினை வளர்க்கின்ற
வேழத்தின் கொற்றம்!ஒ
விழைச்சலின் பெருநிலம்
இழைத்திட்ட வைரமென
எழுந்திட்ட முதல்ஒலி!

வளர்த்திட்ட கரங்களின்
வரித்தடங்கள் ஏராளம்!
உளிபட்ட கற்சிலையாய்
உரமிட்ட பதியமுடன்
உயர்ந்திட்ட அகவை
உவப்பாய் இருபத்தேழு!
பிறந்தநாள் வாழ்த்துகளைப்
பூரிப்பாய்த் தருகின்றேன்!

பருவத்தின் பேதமின்றி
பட்டைதீட்டி நிற்கின்ற
படைப்பின் கூடாரம்
பல்திறத்தின் ஆணிவேர்!
அடுத்த தலைமுறையின்
ஆக்கலின் அரிச்சுவடி
வடித்த பெருமைகள்
வரலாறாய் நின்றொளிரும்
தொடரட்டும். வெற்றிகள்
பாமுகமே நீவாழி!

கீத்தா பரமானந்தன்
10-06-24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading