பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பாமுகமே வாழி!

பாரொளிரும் கதிரொளியாய்
பரவசத்தின் ஊற்றாய்
எழுத்தில் பூத்திட்ட
எழிலான நந்தவனம்!
நாளெல்லாம் மிளிர்கின்ற
நாற்றுக்களின் பட்டறை!

ஆழத் திறனறிந்து
ஆற்றலினை வளர்க்கின்ற
வேழத்தின் கொற்றம்!ஒ
விழைச்சலின் பெருநிலம்
இழைத்திட்ட வைரமென
எழுந்திட்ட முதல்ஒலி!

வளர்த்திட்ட கரங்களின்
வரித்தடங்கள் ஏராளம்!
உளிபட்ட கற்சிலையாய்
உரமிட்ட பதியமுடன்
உயர்ந்திட்ட அகவை
உவப்பாய் இருபத்தேழு!
பிறந்தநாள் வாழ்த்துகளைப்
பூரிப்பாய்த் தருகின்றேன்!

பருவத்தின் பேதமின்றி
பட்டைதீட்டி நிற்கின்ற
படைப்பின் கூடாரம்
பல்திறத்தின் ஆணிவேர்!
அடுத்த தலைமுறையின்
ஆக்கலின் அரிச்சுவடி
வடித்த பெருமைகள்
வரலாறாய் நின்றொளிரும்
தொடரட்டும். வெற்றிகள்
பாமுகமே நீவாழி!

கீத்தா பரமானந்தன்
10-06-24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading