இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
நடிப்பு !
உள்ளத்தை மறைத்து
உலவிடும் பசப்பில்
வெள்ளமாய்ப் பெருகும்
வேடத்தின் முனைப்பு!
தள்ளியே வீழ்த்திடக்
காத்திருக்கும் துடிப்பு!
கச்சிதமாய் எங்கும்
தொடருதே நடிப்பு!

மேடையே காணா
மேதாவி இவராய்
மிளிருவார் நொடியில்
புதுப்புது உருவாய்!
போடுவார் கும்பிடு
புன்னகை தாங்கிச்
சொடுக்கிலே சொருகுவார்
முதுகிலே கத்தி!

நஞ்சினைத் தாங்கி
நகர்கின்ற நாகமாய்!
கொஞ்சிப் பேசிக்
குலத்தையே கருக்கும்
வஞ்சக நடிப்பினில்
வசப்படும் உலகிடை
அஞ்சியே நகருது
அனுதினம் ஆயுள்!

கீத்தா பரமானந்தன்
-24-06-24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading