மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

விடியல்!
சிட்டுக்கள் பாடும்
சீதளம் வீசும்
மொட்டுக்கள் விரிந்தே
முகவுரை எழுதும்!
பட்டொளிக் கதிரும்
பரவியே சிரிக்கப்
பாரினை விடியல்
பதமுடன் அணைக்கும்!

எட்டியே ஓடும்
இடரெனும் இருளும்
இலக்கினை நாடி
இருவிழி கூடும்!
சுட்டிடும் பாதைச்
சுடரொளி ஆகி
சுடர்விடும் எங்கும்
சுதந்திர விடியல்!

விதியெனும் வரைபை
வீழ்த்திடும் ஞானக்
கதிரதன் மலர்வாய்க்
ககனத்தில் விடியல்!
மதியதன் துணையில்
மடமைகள் அழிக்கும்
மந்திர ஒளியே
மனிதத்தின் விடியல்!

கீத்தா பரமானந்தன்21-03-23

விடியல்!
சிட்டுக்கள் பாடும்
சீதளம் வீசும்
மொட்டுக்கள் விரிந்தே
முகவுரை எழுதும்!
பட்டொளிக் கதிரும்
பரவியே சிரிக்கப்
பாரினை விடியல்
பதமுடன் அணைக்கும்!

எட்டியே ஓடும்
இடரெனும் இருளும்
இலக்கினை நாடி
இருவிழி கூடும்!
சுட்டிடும் பாதைச்
சுடரொளி ஆகி
சுடர்விடும் எங்கும்
சுதந்திர விடியல்!

விதியெனும் வரைபை
வீழ்த்திடும் ஞானக்
கதிரதன் மலர்வாய்க்
ககனத்தில் விடியல்!
மதியதன் துணையில்
மடமைகள் அழிக்கும்
மந்திர ஒளியே
மனிதத்தின் விடியல்!

கீத்தா பரமானந்தன்21-03-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading