கீத்தா பரமானந்தன்

நம்பிக்கை

வாழ்க்கை என்னும் சாகரத்தில்
வலிமைத் துடுப்பாய் நம்பிக்கை
தாழ்வு இன்றே கரைசேர்க்கும்
தளர்வை நீக்கி உரங்கூட்டும்!

இறையை மறையைப் போற்றுதலும்
இல்லை என்றே தூற்றுதலும்
துறைகள் தொட்டே மின்னுதலும்
துருவம் தன்னை எட்டுதலும்
நிறைவாய் அவரவர் நம்பிக்கை
நிலைத்துத் தொடருது உலகியலாய்!

முடியும் என்றோர் முனைப்புகளே
முத்தாய்ச் சுகிக்கும் இன்பமெல்லாம்
வடித்துத் தந்த வெற்றிகளாய்
வானும் மண்ணும் பாலமிட்டார்
நொடியில் பாரைச் சுற்றுகிறோம்
நினைவில் பதித்தவர் நம்பிக்கையால்!
நம்பிக்கை நாற்றே கதிராக
நாளைய விடியல் நமக்காகும்!

கீத்தா பரமானந்தன்
24-02-25

Nada Mohan
Author: Nada Mohan