தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நம்பிக்கை

வாழ்க்கை என்னும் சாகரத்தில்
வலிமைத் துடுப்பாய் நம்பிக்கை
தாழ்வு இன்றே கரைசேர்க்கும்
தளர்வை நீக்கி உரங்கூட்டும்!

இறையை மறையைப் போற்றுதலும்
இல்லை என்றே தூற்றுதலும்
துறைகள் தொட்டே மின்னுதலும்
துருவம் தன்னை எட்டுதலும்
நிறைவாய் அவரவர் நம்பிக்கை
நிலைத்துத் தொடருது உலகியலாய்!

முடியும் என்றோர் முனைப்புகளே
முத்தாய்ச் சுகிக்கும் இன்பமெல்லாம்
வடித்துத் தந்த வெற்றிகளாய்
வானும் மண்ணும் பாலமிட்டார்
நொடியில் பாரைச் சுற்றுகிறோம்
நினைவில் பதித்தவர் நம்பிக்கையால்!
நம்பிக்கை நாற்றே கதிராக
நாளைய விடியல் நமக்காகும்!

கீத்தா பரமானந்தன்
24-02-25

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading