கீத்தா பரமானந்தன்

நம்பிக்கை

வாழ்க்கை என்னும் சாகரத்தில்
வலிமைத் துடுப்பாய் நம்பிக்கை
தாழ்வு இன்றே கரைசேர்க்கும்
தளர்வை நீக்கி உரங்கூட்டும்!

இறையை மறையைப் போற்றுதலும்
இல்லை என்றே தூற்றுதலும்
துறைகள் தொட்டே மின்னுதலும்
துருவம் தன்னை எட்டுதலும்
நிறைவாய் அவரவர் நம்பிக்கை
நிலைத்துத் தொடருது உலகியலாய்!

முடியும் என்றோர் முனைப்புகளே
முத்தாய்ச் சுகிக்கும் இன்பமெல்லாம்
வடித்துத் தந்த வெற்றிகளாய்
வானும் மண்ணும் பாலமிட்டார்
நொடியில் பாரைச் சுற்றுகிறோம்
நினைவில் பதித்தவர் நம்பிக்கையால்!
நம்பிக்கை நாற்றே கதிராக
நாளைய விடியல் நமக்காகும்!

கீத்தா பரமானந்தன்
24-02-25

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading