கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நம்பிக்கை

வாழ்க்கை என்னும் சாகரத்தில்
வலிமைத் துடுப்பாய் நம்பிக்கை
தாழ்வு இன்றே கரைசேர்க்கும்
தளர்வை நீக்கி உரங்கூட்டும்!

இறையை மறையைப் போற்றுதலும்
இல்லை என்றே தூற்றுதலும்
துறைகள் தொட்டே மின்னுதலும்
துருவம் தன்னை எட்டுதலும்
நிறைவாய் அவரவர் நம்பிக்கை
நிலைத்துத் தொடருது உலகியலாய்!

முடியும் என்றோர் முனைப்புகளே
முத்தாய்ச் சுகிக்கும் இன்பமெல்லாம்
வடித்துத் தந்த வெற்றிகளாய்
வானும் மண்ணும் பாலமிட்டார்
நொடியில் பாரைச் சுற்றுகிறோம்
நினைவில் பதித்தவர் நம்பிக்கையால்!
நம்பிக்கை நாற்றே கதிராக
நாளைய விடியல் நமக்காகும்!

கீத்தா பரமானந்தன்
24-02-25

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading